வாழ்க்கை


நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை

  • வாழ்க்கை
    அநாகரிகமானதுதான்

    500 ரூபாய்


    500 ரூபாய்

    200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
    ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

    கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

    பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
    அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
    “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
    அனைவரும் கையைத் தூக்கினர்.

    அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
    “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
    அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

    அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
    அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
    தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
    நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

    இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
    அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
    தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
    ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க

    மனமே...மனமே!


    உன் வசந்த வாசலைத் திறந்து வை
    உள்ளே வருபவர்கள் உன்னதமானவர்களா
    காந்தம் போல் கவர்ந்திழு
    கடைசி வரை மறவாதே!
    புதுமையைத் தேடிப்புறப்பட்டு விட்டாயா!
    புலமையைப் பற்றுக் கொண்டிருப்பதன் காரணம்தான் யாதோ
    கண்டொன்று பேசுகிறாய்
    கல்மேல் எழுத்தாய்க் கருத்திலொன்று கொண்டுள்ளாய்
    விளக்குச் சுடரைப் பழமென்று நம்பும் 
    விட்டில் பூச்சி போல் 
    நயமாய்ப் பேசும் நயவஞ்சகர்களை நம்பி
    நாண் இழந்து போகாதே!
    வான்பரப்பில் வட்டமிடும் வண்ணத்திப் பூச்சி போல்
    எண்ணச்சிறகுகளைப் பறக்கவிடு
    தேனெடுக்கப் பூவில் அமரும் தேனீ போல்
    புவியெங்கும் கரு தேடு 
    கவிதைக்குப் பொருள் தேடு!
    மனமே! நீ ஒரு மர்மம்
    மறைந்திருந்து ஆட்டிப் படைக்கும் ஓர் ஆச்சரியம்
    அரிதாரம் பூசி உலகில் நடமாடும் அவதாரம்
    நரிபோல் உடலுள் நடனம் புரியும் நயவஞ்சகன்
    ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்யும் ஓர் அறணை
    வருகிறேன் உன்னை அடக்கவோர் ஆயுதம் கொண்டு
    வடிக்கிறேன் ஓர் வடிவமாய்
    இடம் தராது இழுத்துப் பிடிக்கிறாயா
    மூச்சை அடக்கி முழுமூச்சாய் முன்னேறுகிறேன்
    தியானத்தில் நீ நியாயம் காண்பாய்
    தியானத்தில் நீ நியாயம் காண்பாய்

    மீண்டும் ஒரு தேர்தல்


    மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது! 
    வாக்காளனே!
    உன் வாக்குகளுக்கு விலை கூறி
    வாடிக்கையாளர்கள் வருவார்கள்!
    வசமிழந்து விடாதே!
    நீ
    வாக்குகளுக்காய் வாங்கும் பணம்
    உன் மனசாட்சிக்கும் சேர்த்துதான்!
    உன்
    மனசாட்சிக்கு விலை வைக்கும்
    அரசியல்வாதிகள் நாளை
    உன்னையே விற்றுவிடுவார்கள்!
    நீ
    வாக்களிக்கும்போது
    உன்
    ஆள்காட்டி விரலில் இடும் மையால்தான்
    நாளை வரும் அரசுக்கு
    அனுமதி கையொப்பம் இடுகிறாய்!
    மனசாட்சி உன்னோடே இருக்கட்டும்!
    மக்களின் ஆட்சி நன்றாய் மலரட்டும்!

    நான் வீழ்வேன் எனநினைத்தாயோ

    தேடிச்சோறு நிதந்தின்று
    பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
    மனம் வாடித் துன்பமிக உழன்று
    பிறர் வாடப் பல செயல்கள்
    செய்து நரை கூடிக் கிழப்பருவமெய்திக்
    கொடுங்கூற்றுக் கிரைஎனப்
    பின்மாயும் பலவேடிக்கை மனிதரைப்
    போல்
    நான் வீழ்வேன் என நினைத்தாயோ

    kannadasan words

    alum bodhu thanimayil alu.
    sirikum bodhu nanbargaludan siri.
    kootathil aludhaal nadipu enbargal!
    thanimayil sirithaal paithyam enbargal…
    <b>tamil love poems</b> in <b>tamil</b>

    என் நட்பு மலர்களே..!

    Tamil Poems




















    உங்களிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
    உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??
    தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
    கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!

    உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
    என் சோகங்கள் சிதறின...!
    என் கனவு கவிதையாயின...
    அன்பு தோழமை நெஞ்சங்களே...!
    வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
    நன்றி கூறுகிறேன் உங்களை எனக்கு தந்தமைக்கு

    கட்டற்ற காதலுக்குள்..!


    கட்டற்ற காதலுக்குள்
    கட்டுப்பாடுகள்
    விதித்துக் கொண்டோம்!
    கண்ணியமாய் நடந்து கொள்ள
    உணர்வுகளைப்
    புதைத்துக்கொண்டோம்..!
    உன் உயிரினை
    நான் தொடும் போதும்
    என் உயிரினை
    நீ தொடும் போதும்
    எட்ட நின்று
    ஏக்கப் பெருமூச்சு கண்டோம்..!
    காலம் தாழ்த்தி
    சந்தித்தது ஏன் என்று
    வினவியபடி...
    நீ விதியைக் குறை சொன்னாய்
    நான் மதியைக் குறை சொன்னேன்...
    காலம் நமைப் பார்த்து சிரித்தது
    அது நான் செய்த சதியென்று..!

    உன்னால் கவிதை


    en_pakkam_image1








    எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
    அழகு, சிரிப்பு, அழுகை, தமிழ்

    உன் அழகை கண்டேன்,
          நெருங்கி வந்தேன்,
          சிரித்தாய் ,
    கட்டி அணைத்தேன்,
          முத்தமிட்டேன்

    தனி அறையில் நீயும், நானும்,
          உன்னை ரசித்தேன்,
          உன் உடலை ரசித்தேன்,
          உன் பேச்சை ரசித்தேன்,
    நீ விலகிச்செல்வதை ரசித்தேன்,
    நீ நெருங்கி வருவதை ரசித்தேன்,
    உன்னை கண்ணோடு கண்வைத்து
    பார்த்து ரசித்தேன்,
    உன்னை என் விருப்பப்படி
    வரைந்து ரசித்தேன்,
    உன்னுடன் விளையாடி ரசித்தேன்,

    உன்னால்....

    எனக்கு பிடித்த வார்த்தைகளில்
    இருந்து அழுகையை எடுத்துவிட்டு
    காதலை சேர்த்துக்கொண்டேன்

                                                                ... சஞ்சு

    ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி


    ஒன்று சேர்
    ஏனென்று கேள்
    எட்டி சட்டைப்பிடி
    இல்லை - மனிதரென்று தன்னைச்
    சொல்லிக் கொள்வதையேனும்
    நிறுத்து
    தன் கண்முன்
    தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
    மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -
    அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
    நம்மை மனிதரென்று சொல்ல
    நாக்கூசவில்லையோ???
    கண்முன் படம் படமாய்
    பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து
    அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த
    குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?
    அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???
    மூடி இருந்த கண்கள்
    இன்று திறந்தேனும் இருப்பது நன்று
    என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்
    அவிழ்த்து விடு உறவே;
    என் தாயைக் கொன்ற
    என் மகனை கருவறுத்த
    என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற
    என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு
    கோபத்தை - அங்கே கடைசித் தமிழனொருவன்
    சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;
    ஒருவரைக் கொன்றதால்
    பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்
    பலரைக் கொன்றவனை
    ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை
    ஏனென்று தட்டிகேள்
    தமிழன் எனில்
    தண்ணீ­ர் தெளித்து விடப்பட்டவனா?
    கேள்வி கேட்க யாருமற்றவனா?
    ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???
    இல்லையென்று பறைசாற்று;
    தெருவில் செல்கையில் ஒருவன்
    இடித்துச் சென்றாலே கோபம் வரும்
    இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து
    படம் பிடித்து
    எள்ளிநகைத்து
    இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?
    காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???
    என்ன செய்தோம் நாம்?
    இனி என்ன செய்வோம் நாம்?
    வாய்மூடி காணொளி பார்த்து
    போஸ்டர் ஒட்டி
    செய்தியில் பேசி
    கூட்டம்போட்டு
    கண்­ணீர்விட்டழுது
    யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி
    காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை
    கோழையென்று எழுதிக் கொள்வோமா?
    இறந்தவரையெல்லாம்
    நஞ்சு எரித்து சுட்டவன்
    இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்
    ஒரு தீக்குரல் கொடுத்து -
    தன் இருப்பினை ஒற்றுமையை
    ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?
    போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை
    காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்
    தோலுரிக்க வேண்டாமா?
    உரிப்போம்
    இனி உரிப்போமென சூளுரைப்போம்
    தமிழர் பற்றிய ஒரு அசட்டை
    அவன் உயிரின் கடைசிப்
    புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்
    தீப்பந்தமேந்தி -
    அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்
    மீதெறிவோம்
    கையுடைந்து
    காலுடைந்து
    உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று
    அலறிய மக்களின் காணொளிகளை
    கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்
    நடந்தது தவறு
    இத்தனை அப்பாவி மக்களைக்
    கொன்றது பெருங்குற்றம்
    போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு
    படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்
    காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்
    இத்தனை வருடம்
    மறைமுகமாய் அழித்தான்,
    இன்று வெளிப்படையாய் கொன்றான்
    நாளை?
    நாளை என்று அவன் எண்ணுவதற்குள்
    அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்
    குத்துவோம்
    அவன் நாடு
    அவன் ஆட்சி
    எதுவாகவேணும் இருந்துப் போகட்டும், அங்கே
    அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
    ஒன்று சேர்
    ஏனென்று கேள்
    எட்டி அவன் சட்டை பிடி;
    எழுந்து நாலு அரை விடு;
    எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்
    உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
    உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
    நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!
    வித்யாசாகர்