நான் வீழ்வேன் எனநினைத்தாயோ

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள்
செய்து நரை கூடிக் கிழப்பருவமெய்திக்
கொடுங்கூற்றுக் கிரைஎனப்
பின்மாயும் பலவேடிக்கை மனிதரைப்
போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ